ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
தென் ஆப்பிரிக்க நாட்டில் பரவி வரும் மரபணு மாறிய கொரோனாவான ஒமைக்ரான் வகை வைரஸானது மீண்டும் உலக அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,ஒமைக்ரான் வகை வைரஸினை 3 மணி நேரத்தில் கண்டறியும் வசதியுடன் தமிழகத்தில் 12 அரசு ஆய்வகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி,சென்னை,கோவை,மதுரை,திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் 12 அரசு ஆய்வகங்களில் சோதனை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டேக்பாத் என்ற கருவியின் உதவியுடன் இந்த 12 அரசு ஆய்வகங்களில் பரிசோதனை செய்து முடிவுகள் அறிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.முதல்கட்ட பரிசோதனையில் மரபணு மாற்றம் இருப்பது தெரிய வந்தால்,அதன்பின்னர் மரபணு பகுப்பாய்வு செய்யப்படும்.இந்த மரபணு பகுப்பாய்வு முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும் என்று சுகாதாரத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக,ஒமைக்ரான் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி :நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறும், ஆகஸ்ட் 13…
சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…
சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…
சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…