பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
மாற்றமில்லை:
எனினும்,கடந்த நான்கரை மாதங்களுக்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விலை உயர்வு:
இதனையடுத்து,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மீண்டும் அதிகரிப்பு:
இந்நிலையில்,இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதிர்ச்சி:
உக்ரைன்- ரஷ்யா போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில்,கடந்த இரண்டு நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 51 காசுகளும்,டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 52 காசுகள் அதிகரித்துள்ளது.இது வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…