#BREAKING : நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க முடிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published by
லீனா

நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்நிலையில்,  நீட் தேர்வு தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் மன உளைச்சல் கொள்ளக்கூடாது.

மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றுவதற்காக முதல்வர் மிகப் பெரிய அளவிலான திட்டங்களை முன்னெடுத்து கொண்டிருக்கிறார். நாங்கள் தேர்தல் அறிக்கையில் முதல் கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்து இருந்தோம்.

அதன்படி சட்டப்பேரவையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு முடிவுகளுக்குப் பின்னர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மன நல ஆலோசனை கொடுக்கலாம் என்றும் முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

7 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

8 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

9 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

10 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

11 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

11 hours ago