ஓபிஎஸ் 10வது முறையாக பட்ஜெட் தாக்கல்.!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக நிதிநிலை அறிக்கை இன்று சற்று முன்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளி கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக அரசின் இந்த ஆண்டுக்கான கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் நடைபெற்று வருகிறது. இதை  துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் இடம்பெறாதது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அரசின் வருவாயை விட செலவு அதிகம் இருக்கும் என ஏற்கனவே கணக்கிடப்பட்ட நிலையில், இந்த முறையின் தமிழக அரசின் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனினும் ஏராளமான புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

கடந்த 2011-ம் ஆண்டு முதல் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக பிளவு ஏற்பட்டால் அப்போது நிதித்துறையை கவனித்து வந்த ஜெயக்குமார் 2017-ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தார். அந்த வகையில் 2017-ம் ஆண்டை தவிர்த்து 2011 முதல் 2019-ம் ஆண்டு வரையிலான தமிழக பட்ஜெட்டை ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் தற்போது 10-வது முறையாக துணை முதல்வர் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

2 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

3 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

4 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

4 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago