பேருந்து கட்டணம் உயர்வு..? – அமைச்சர் ராஜகண்ணப்பன் விளக்கம்..!

Published by
murugan

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து செங்கல்பட்டுக்கு மீண்டும் அரசு பஸ் சேவை தொடங்கியுள்ளது. இந்த பேருந்து சேவையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை; போக்குவரத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும். பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2,500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். நிதிச்சுமையை பற்றி கவலைப்படவில்லை.

மக்கள் நலனைத்தான் பார்க்கச் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர். பேருந்து நிலையங்களில் மீண்டும் அம்மா குடிநீர் பாட்டில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வண்டலூர் அருகே கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் இந்த ஆட்சி காலத்தில் கட்டி முடிக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

Published by
murugan

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

38 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

2 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago