கொரோனா தொற்று அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் பேருந்து சேவையை அனுமதிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, கூடுதல்தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று சுகாதாரத்துறை, அரசுத்துறை மற்றும் மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதன்படி, கொரோனா பரவல் குறையாத 8 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 30 மாவட்டங்களில் பேருந்து சேவை அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 50 சதவீத பயணிகளுடன் பேருந்து சேவையை தொடங்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளதாகவும், கொரோனா பரவல் அதிகம் உள்ள எட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தொடரவும், கொரோனா தொற்று குறைந்துள்ள பிற மாவட்டங்களில் மால்கள் மற்றும் பெரிய கடைகளை திறப்பதற்கும் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரைத்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…