நாட்டில் ஸ்மார்ட் சிட்டிகளின் உருவாக்கத்தாலும் சாலை மேம்பாடு என்ற பெயராலும் மரங்கள் அழிக்கப்படுவதால் வாழ்வைத் தொலைப்பது மனிதர்கள் மட்டுமல்ல… இப்பூவுலகின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்க்கும் உணவு சங்கிலிக்கும் ஊன்றுகோலாக இருக்கக் கூடிய சின்னச் சின்ன உயிரினங்களும் தான்.சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் மார்க் க்ரிகோரியஸ், கலை அறிவியல் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசியராகப் பணிபுரிந்து வருகிறார். தினமும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் சதீஷ்,
ரயில் நிலையத்தில் தினமும் வண்ணத்துபூச்சிகள் இறந்து கிடப்பதைக் கவனித்துள்ளார். இயற்கை ஆர்வலரான இவர் , உடனே தமிழக முதல்வர் அலுவலகத்துக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வுக்காக மனு ஒன்றையும்அனுப்பிவைத்துள்ளார். பின், முதல்வர் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், `சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் வண்ணத்துப் பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்’ என அந்த கடிதத்தில் பதில் வந்திருந்தது. நான் மனு கொடுத்த பிறகு திருமங்கலம் மெட்ரோ நிலையத்துக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து ஆய்வுக்கு வந்துள்ளனர்.
மறுநாளிலிருந்து நான் பட்டாம்பூச்சிகளைப் பார்க்கவில்லை. அவை இறந்து விழுந்தாலும், உடனே அதனை சுத்தம் செய்துவிடுகின்றனர். என்றாலும் இதற்க்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்றும் மீண்டும் ஒரு மணு கொடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…