அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை உயர்நீதிமன்றம் விதித்துள்ளது.
2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது கொடுங்கையூரில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் திமுக-அதிமுகவினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், இருதரப்பு புகாரின் பெயரில் கொடுங்கையூர் காவல்நிலையத்தில் சேகர் பாபு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், வழக்கை ரத்துசெய்யக்கோரியும், விசாரணைக்கு தடைவிதிக்க கோரி அமைச்சர் சேகர் பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடந்த தகராறு தொடர்பாக அமைச்சர் சேகர் பாபு மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்துள்ளது.
மேலும், வழக்கை ரத்துசெய்யக்கோரி சேகர் பாபு தொடர்ந்த மனு மீது பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கை ரத்துசெய்யக்கோரும் அமைச்சர் சேகர் பாபு மீதான விசாரணை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…