பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

Published by
பாலா கலியமூர்த்தி

நிபந்தனையில் தளர்வு இல்லை என்று கூறி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

அவதூறு பரப்பிய புகாரில் தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை கடந்த மாதம் சென்னை உள்ள அவரது வீட்டில் மதுரை தனிப்படை போலீசார் கைது செய்து மதுரைக்கு அழைத்து சென்றனர். பின்னர், அவதூறு வழக்கு தொடர்பான வழக்கில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில், சிறையிலடைக்க மதுரை விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, அவதூறு வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்றிருந்தார் எஸ்.ஜி சூர்யா. அதன்படி, மதுரை காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, நிபந்தனையில் தளர்வு கோரி எஸ்.ஜி சூர்யா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், ஜாமீன் நிபந்தனையில் தளர்வு கோரி பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தொடர்ந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னையில் தங்கி இருந்து கையெழுத்திட அனுமதி கோரிய மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதுரை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு கோரியிருந்தார் எஸ்.ஜி சூர்யா. ஆனால், நிபந்தனையில் தளர்வு இல்லை என்று மதுரை மாவட்ட நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

‘ரெயில் விபத்து அதிர்ச்சி, வேதனையளிக்கிறது’- தவெக விஜய் இரங்கல்.!

சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…

20 minutes ago

போதைப்பொருள் வழக்கு: ‘நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமீன்’ – உயர் நீதிமன்றம்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…

46 minutes ago

ஜூலை 18-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.!

சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…

1 hour ago

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்தில் இதுவரை நடந்தது என்ன.?

கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…

1 hour ago

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…

2 hours ago

UAE கோல்டன் விசா: இந்தியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் குடும்பத்துடன் வாழ அரிய வாய்ப்பு!

எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…

3 hours ago