முந்திரி தொழிலாளி கொலை வழக்கு : கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் – உயர்நீதிமன்றம்

Published by
லீனா

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு  விவகாரத்தில், கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. 

கடலூர் தொகுதி திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்து வந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரமேஷ் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல்  தரப்பில், இந்த  சிபிசிஐடி ஒருதலை   செயல்படுகிறது.சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, அவரது ஜாமீன் மனுவையும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, திமுக எம்.பி ரமேஷ் தரப்பில், இந்த சம்பவம் நடந்த போது தன்னுடைய பெயர் சேர்க்கப்படவில்லை என்றும், பின்னர் தான் தான் இந்த சம்பவம் தொடர்பாக தான் குற்றவாளி என்று பெயர் சேர்க்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, கடலூர் எம்.பி ரமேசுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மேலும்,விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற  கோரும் மனு மீது, நவ.23-ஆம் தேதி உததரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளனர்.

Recent Posts

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

14 minutes ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

2 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

2 hours ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

2 hours ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

3 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 hours ago