முந்திரி தொழிலாளி கொலை வழக்கு : கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் – உயர்நீதிமன்றம்

Published by
லீனா

முந்திரி தொழிலாளி கொலை வழக்கு  விவகாரத்தில், கடலூர் திமுக எம்.பி ரமேஸுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு. 

கடலூர் தொகுதி திமுக எம்.பி ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலை பண்ருட்டி அடுத்த பணிக்கன் குப்பம் பகுதியில் உள்ளது. இங்கு வேலை செய்து வந்த தொழிலாளி கோவிந்தராசு கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட ரமேஷ் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், கோவிந்தராசுவின் மகன் செந்தில் வேல்  தரப்பில், இந்த  சிபிசிஐடி ஒருதலை   செயல்படுகிறது.சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். எனவே இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, அவரது ஜாமீன் மனுவையும் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, திமுக எம்.பி ரமேஷ் தரப்பில், இந்த சம்பவம் நடந்த போது தன்னுடைய பெயர் சேர்க்கப்படவில்லை என்றும், பின்னர் தான் தான் இந்த சம்பவம் தொடர்பாக தான் குற்றவாளி என்று பெயர் சேர்க்கப்பட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.

இந்நிலையில், இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி, கடலூர் எம்.பி ரமேசுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.  மேலும்,விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற  கோரும் மனு மீது, நவ.23-ஆம் தேதி உததரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளனர்.

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

5 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

6 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

6 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

7 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

7 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

8 hours ago