காவிரி மேலாண்மை கூட்டம் – தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம், கேரளாவைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக அரசின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை காவிரியில் உடனடியாக திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அதன்படி, தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழகத்திற்கான காவிரி நீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவிட கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாகவும், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 38 டிஎம்சி தண்ணீரை உடனே திறக்க தமிழக அரசு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை 53 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 15 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட்டன என குற்றசாட்டியுள்ளனர்.

இதனால் தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என தமிழக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழக அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது. அரசின் கோரிக்கையை ஏற்காததால் கூட்டத்தில் இருந்து வெளியேறியதாக சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கு கடந்த 9-ம் தேதி வரை 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தர வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

10 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

11 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

12 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

12 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

13 hours ago