Cauvery River [File Image]
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவேரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவேரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவின் பெயரில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை வாரியம் உத்தரவின்படி, காவேரியில் இருந்து கடந்த 4 மாதங்காளாக தமிழகத்திற்கு கர்நாடக அரசு தரவேண்டிய தண்ணீர் அளவானது, ஜூன் மாதம் 9 டிஎம்சி, ஆகஸ்ட் மாதம் 45 டிஎம்சி, செப்டம்பர் மாதம் 36 டிஎம்சி தண்ணீர் தரவேண்டும்.
ஆனால் கடந்த 4 மாதங்களாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை கொடுக்கவில்லை. கடந்த 4 மாதங்களில் மட்டும் 40 டிஎம்சி அளவில் தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது. இம்மாதம் மட்டும் அதிகபட்சமாக 25 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட வேண்டியுள்ளது.
இந்நிலையில் தான் இன்று காவேரி ஒழுங்காற்றுகுழு அலோசனை நடத்துகிறது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நீர்வளத்துறை அமைச்சக அலுவலகத்தில் காணொளி வாயிலாக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தமிழகத்திற்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…