சென்னை அண்ணாநகரை சேர்ந்த பெண் ஒருவர் வயது (32) .இவர் மத்திய அரசு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் நான் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வருகிறேன்.
அண்ணாநகர் தெற்கு காலனியை சேர்ந்த வெள்ளைதேவன் (24), என்னிடம் தம்பி போல பழகி வந்தான். அவன் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்து சென்றான். அங்கு “கேக்” வெட்டிய பிறகு நான் வீட்டிற்கு புறப்பட்டபோது எனக்கு அவன் குளிர்பானம் கொடுத்தான். அதை குடித்ததும் நான் மயங்கி விட்டேன்.
பிறகு கண் விழித்து பார்த்தபோது நான் நிர்வாணமாக இருந்தேன். என்னை என்ன செய்தாய்.? எனகதறி அழுதபோது அவன் என்னுடைய பிறந்தநாள் பரிசே நீதான் என கூறினான். மேலும் ஆபாசமாக வீடியோவும் எடுத்துள்ளான். அந்த வீடியோவை காட்டி அவ்வப்போது என்னிடம் பணம் பறித்து வருகிறான்.
ஆசைக்கு இணங்கவில்லை என்றால் அந்த வீடீயோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறான். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, இதுவரை ரூ.15 லட்சம் பறித்துள்ளான். தற்போது திருமணம் செய்துக்கொள்ள முடியாது என கூறுகிறான் என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வெள்ளைதேவனை கைது செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என்.சேஷசாயி முன் விசாரணைக்கு வந்தது.
வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என அந்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இறுதியாக வெள்ளைதேவனுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…