புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழு வருகை..!

Published by
murugan

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நன்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பள்ளிகள், வீடுகள் என பல்வேறு இடங்களில் வெள்ளநீர் புகுந்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பால், உணவு பொருட்கள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வந்தனர்.

தற்போது அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் , தனிப்பட்ட நபர்கள் என பல்வேறு தரப்பினர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்ட  4 மாவட்டங்களில் தற்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதற்கிடையில் கடந்த 7-ஆம் தேதி  மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை வந்தார்.

‘மிக்ஜம்’ புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களை ஹெலிகாப்டர் மூலம் சென்று பார்வையிட்டார். பின்னர் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்  உடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். அப்போது புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ. 5,060 கோடி வழங்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதனைதொடர்ந்து, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 450 கோடியும், சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து ரூ.561 கோடியை மத்திய அரசு விடுவித்தது.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் மத்திய குழு இன்று சென்னை வருகிறது.  இந்த மத்திய குழு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பாதிப்புகளை ஆய்வு செய்ய உள்ளது.

Recent Posts

சிக்கிமில் திடீர் நிலச்சரிவு! 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு! மாயமான 6 வீரர்களின் நிலை?

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, நிலைமை மிகவும் மோசமாகி, லோச்சன் மற்றும் லாச்சுங்…

15 minutes ago

ஒரே நாளில் ஓய்வை அறிவித்த 2 அதிரடி வீரர்கள்.! எந்த போட்டியில் இருந்து தெரியுமா?

பிரிட்டோரியா : இன்று ஜூன் 2 (திங்கட்கிழமை) ஒரே நாளில் கஹென்ரிச் கிளாசென் மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் க்ளென் மேக்ஸ்வெல்லும்…

38 minutes ago

‘தக் லைஃப்’ படத்திற்கு தடை: கர்நாடக உயர்நீதிமன்றத்தை நாடிய கமல்ஹாசன்.!

கர்நாடகா : கடந்த மே 24 அன்று சென்னையில் நடந்த தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன்,…

1 hour ago

“ஐபிஎல் பைனல் முடிவு என்னவாக இருந்தாலும் மனவேதனை தான்” – இயக்குநர் ராஜமௌலி.!

சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் ஃபைனலுக்குள் நுழைந்துள்ளது. அதேநேரம், மும்பை…

2 hours ago

உதயநிதி ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு – தமிழக அரசு.!

சென்னை : துணை முதல்வர் உதயநிதிக்கு காய்ச்சல் மற்றும் தொடர் இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவருக்கு…

3 hours ago

சென்னையில் 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி.!

சென்னை : இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி, 3,961 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப…

3 hours ago