Union Minister Nitin Gadkari [File Image]
தமிழக தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக செல்ல சுமார் 350 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் பயண நேரமானது சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரையில் கூட ஆகும். அந்தளவுக்கு அந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலும் பல்வேறு இடங்களில் காணப்படும் .
இதனை தவிர்க்கவே, மத்திய அரசு புதிய சாலை திட்டத்தை கொண்டு வந்து அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள்ளது. இந்த சாலை திட்டத்தின் கீழ் சுமார் 350 கிமீ இருந்த தூரமானது, பல்வேறு கணக்கீடுகள் கொண்டு, தற்போது 258 கிமீ அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது 4 வழிசாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திட்ட மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சாலை பணி எப்போது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பலரும் எதிர்பார்த்த நேரத்தில் தற்போது அதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் இருந்து டெல்லி வரை சாலை மார்க்கமாக விரைவில் நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனவும், அதற்கு முன்னர் தற்போது சென்னை முதல் பெங்களூரு வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி மாதம் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணிநேரத்தில் பயணிக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக…
சென்னை : மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாக முகவர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பல…
சென்னை : எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் பஹத் பாசில் தமிழில் இந்த முறை வடிவேலுடன்…
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 21-ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் கால் விரலில்…
லண்டன் : இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…