Union Minister Nitin Gadkari [File Image]
தமிழக தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சாலை மார்க்கமாக செல்ல சுமார் 350 கிமீ தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இதன் பயண நேரமானது சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரையில் கூட ஆகும். அந்தளவுக்கு அந்த தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசலும் பல்வேறு இடங்களில் காணப்படும் .
இதனை தவிர்க்கவே, மத்திய அரசு புதிய சாலை திட்டத்தை கொண்டு வந்து அதன் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள்ளது. இந்த சாலை திட்டத்தின் கீழ் சுமார் 350 கிமீ இருந்த தூரமானது, பல்வேறு கணக்கீடுகள் கொண்டு, தற்போது 258 கிமீ அளவுக்கு சுருக்கப்பட்டுள்ளது. இந்த சாலையானது 4 வழிசாலையாக அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திட்ட மதிப்பீடு சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக நடைபெற்று வரும் இந்த சாலை பணி எப்போது திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பலரும் எதிர்பார்த்த நேரத்தில் தற்போது அதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சென்னையில் இருந்து டெல்லி வரை சாலை மார்க்கமாக விரைவில் நெடுஞ்சாலை அமைக்கப்படும் எனவும், அதற்கு முன்னர் தற்போது சென்னை முதல் பெங்களூரு வரையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றும், வரும் ஜனவரி மாதம் இந்த சாலை மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை மூலம் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2 மணிநேரத்தில் பயணிக்கலாம் எனவும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…