#பரோல் # விவகாரம்-“சிறை விதி”யை திருத்துங்கள்! – கோர்ட் அதிரடி

Published by
kavitha

கைதிகளுக்கு பரோல் கிடைக்க வகைச்செய்யும் சட்டத்தில் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

அங்கையற்கண்ணி  என்பவர் சென்னையை சேர்ந்தவர் இவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:ஒரு வழக்கில், என் கணவருக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனையானது விதிக்கப்பட்டது.

சென்னை, புழல் சிறையில், 16 மாதங்களுக்கு மேலாக இருந்து வருகிறார். எங்களுக்கு, 2 மகள்கள் உள்ளனர். அவர்கள், கல்லுாரியில் படித்து வருகின்றனர்.குழந்தைகளின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுக்கும், சிரமாக உள்ளது.

பணம் ஏற்பாடு செய்ய, என் கணவர் சிறையில் இருந்து வெளியே வர வேண்டும்.அவருக்கு, ஒரு மாத விடுமுறை வழங்க, சிறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கோரிக்கை வைத்தார்.

 

இந்த மனு மீதான விசாரணை  நீதிபதிகள் கிருபாகரன், வேலுமணி அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாவதி வாதாடுகையில் சிறை விதிகளின்படி, சாதாரண விடுமுறை பெற வேண்டும் என்றால், குறைந்தபட்சம், இரண்டு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும். அதனால் விடுமுறை வழங்க இயலாது  என்று கூறினார்.

மனுவை விசாரித்த  நீதிபதிகள் ஏற்கனவே, 16 மாதங்கள் சிறையில் உள்ளார். மொத்த சிறை தண்டனையே  மூன்று ஆண்டுகள் தான். அதனால், மகள்களின் படிப்பு செலவுக்கு பணம் ஏற்பாடு செய்வதற்காக, மனுதாரரின் கணவருக்கு, ஒரு மாத சாதாரண விடுமுறை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட கைதி ஆகஸ்ட், 8ம் தேதி, சிறைக்கு அவர் திரும்ப வேண்டும். ஒவ்வொரு திங்கள் கிழமையும், கே.கே.நகர் போலீசில் ஆஜராக வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நிலையில்      சிறை விதிகளில் திருத்தம் வர வேண்டும்.

3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், அதிக ஆண்டுகள் மற்றும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நபர்களுக்கும், ஒரே மாதிரியான விதியை திணிக்க முடியாது. சாதாரண விடுமுறை பெற, இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் இருக்க வேண்டும் என்றால், அது கைதிகளின் உரிமையை பாதிக்கும்.எனவே, 2 முதல், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுபவர்களுக்கு, சாதாரண விடுமுறை பெற ஏதுவாக, சிறை விதிகளில் திருத்தத்தை  செய்யுங்கள் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Recent Posts

கோப்பையை வென்ற பெங்களூர் அணி…போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?

கோப்பையை வென்ற பெங்களூர் அணி…போராடி தோற்ற பஞ்சாப்! பரிசுத்தொகை எவ்வளவு?

அகமதாபாத் : நாம ஜெயிச்சிட்டோம் மாறா என பெங்களூர் அணியின் 18-ஆண்டுகள் கனவான கோப்பையை வெல்லும் கனவு நேற்று நிறைவேறியது.…

27 minutes ago

குழந்தை போல தூங்குவேன்! கோப்பையை வென்றதால் எமோஷனலான விராட் கோலி!

அகமதாபாத் : ஐபிஎல் சீசன் தொடங்கி 18-ஆண்டுகள் ஆகியிருக்கும் நிலையில் ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்கிற விமர்சனத்தை வாங்கிக்கொண்டு…

47 minutes ago

நம்ம ஜெயிச்சிட்டோம் மாறா.!! 18 வருட கனவு.., முதல் முறையாக கோப்பை வென்றது RCB அணி.!

அகமதாபாத் : ஐபிஎல் தொடரின் இன்றைய தினம் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் இடையே…

8 hours ago

யார் கனவு நனவாகும்? 191 ரன் அடிச்சா கப் உங்களுக்கு.., சவாலான இலக்கு வைத்த ஆர்சிபி.!

அகமதாபாத் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 இன் இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப்…

10 hours ago

”விருதுகள், மானியங்களை விரைந்து வழங்கிடுக”- முதல்வர் ஸ்டாலினுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் கடிதம்.!

சென்னை : தமிழக அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் திரைப்படங்களுக்கான மானியங்கள் கடந்த 2016 முதல் 2022 வரை நிலுவையில் உள்ளது.…

11 hours ago

”ஜூன்-5ல் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட வேண்டும்” – தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.!

சென்னை : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தமிழில் இருந்து பிறந்ததுதான்…

11 hours ago