[Image source : Shutterstock]
இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நடைபெறும் மோசடிகள் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
சில நாட்களுக்கு முன்னர் சென்னை கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்கையில் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த காரணத்தால் தான் தற்கொலை செய்துகொண்டார் என்பதை அறிந்து, அதன் பின்னர் காவல்துறையினர் மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 இளைஞர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஏப்ரல் மாதம் கல்லூரி பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதனை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. பின்னர் காவல்துறை விசாரணையில் அவர் இன்ஸ்டாகிராமில் ஒருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து ஆன்லைன் திருட்டு (Cheating) வழக்காக மாற்றி விசாரணை செய்து ஏப்ரல் 28இல் தனிப்படை பிரிவினர் கொல்கத்தா சென்று, அங்கிருந்து அங்கு 14 நாட்கள் தங்கி, அமனுல்லா கான் , முகமது பைசல், முகமது அசபிக் பால் ஆகிய 22-23 வயது இளைஞர்களை கைது செய்தனர். கைது செய்து அவர்களை தமிழகம் அழைத்து வந்தனர்.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், முதலில் கல்லூரி பெண்ணிடம் 760 ரூபாய் கட்டினால் 25 ஆயிரம் கிடைக்கும் என இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் வந்துள்ளது. அந்த கல்லூரி பெண் அதனை நம்பி ஏமாந்து, பணத்தை அளித்துள்ள்ளார். அப்படியே 37,500 ருபாய் வரையில் கொடுத்துள்ளார். பணம் திரும்பி வராததால் பலமுறை கேட்டு பின்னர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார் என விளக்கம் அளித்தார் காவல் இணை ஆணையர்.
மேலும், தற்போதைய இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் செலவிடுகின்றனர். அதில் வரும் தகவல்களை வெகுவாக நம்புகின்றனர். அதனை தவிர்க்குமாறு சென்னை காவல் இணை ஆணையர் ரம்யா பாரதி செய்தியாளர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு செய்தியை குறிப்பிட்டார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…