தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி தொடங்கப்பட்ட பிறகு முதல் மாநாடு கடந்த 2007-ம் ஆண்டு நெல்லையில் நடந்த நிலையில் தற்போது 2-வது மாநாடு சேலத்தில் நடக்கிறது. மாநாட்டில், 25 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட நிலையில் அதை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் வாசித்தார். தொடர்ந்து உதயநிதி, கனிமொழி உள்ளிட்டோர் மேடையில் உரையாற்றினார்.
இதனை தொடர்ந்து மாநில மாநாட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் நிறைவுப் பேருரையாற்றினார். அவர் பேசுகையில், “தெற்கில் விடியல் பிறந்தது போல விரைவில் இந்தியா முழுவதும் விடியல் பிறக்கும் உதயநிதி மக்கள் பணிகளில் எனக்கு துணையாக இருக்கிறார், எனக்கு 30 வயதாக இருக்கும் போது இளைஞரணி கட்சியில் அமைக்கப்பட்டது. தற்போதும் வீறுகொண்டு சிறப்பாக செயல்படுகிறது.
இளைஞரணி மீது எனக்கு எப்போதும் தனி பிரியம் உண்டு. அது தான் என்னை இந்த தாய் தமிழ்நாட்டை ஆள உதவியிருக்கிறது, நான் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்க காரணம் என்னை சுற்றி எப்போதும் இளைஞர்கள் இருப்பது. இளைஞரணி தம்பிமார்களே நீங்களும் நாளை எம்.எல்.ஏவாகவும், அமைச்சர்களாவும், மாவட்ட செயலாளர்களாகவும் வர வேண்டும்.
இளைஞரணி மாநாட்டில் வீர வாள், கேடயத்தை வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
ஒரு காலத்தில் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்தான் பிரதமர் மோடி ஆனால் தற்போது மாநிலங்களை மொத்தமாக ஒழித்துக் கட்டும் முயற்சியில் பிரதமர் ஈடுபட்டு வருகிறார். மாநில அதிகாரங்களுக்கு உட்பட்டவைகளுக்கும் மத்திய அரசு சட்டம் இயற்றி வருகிறது. எந்த சட்டத்தை கொண்டு வந்தாலும் மாநில முதலமைச்சர்களிடம் ஆலோசனை கேட்பதில்லை என கூறினார்.
சமீபத்தில் ஏற்பட்ட பேரிடரின் போது 37000 கோடி பணம் கேட்டிருந்தோம். ஆனால் இதுவரை ஒரு பைசா கூட வரவில்லை. பிரதமர் வந்தார் தருவேன்னு சொன்னார், நிதியமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார், பாதுகாப்பு துறை அமைச்சர் வந்தார் தருவேன்னு சொன்னார் இப்ப வரைக்கும் ஒன்னும் வரல, 40-ம் நமதே, நாடும் நமதே என்ற முழக்கத்துடன் நாளை முதல் புறப்படுங்கள், நம்முடைய நோக்கம் இந்தியா கூட்டணியை வெல்ல வைப்பது.
உதயநிதி மட்டுமல்ல நீங்கள் அனைவருமே என் மகன் தான், உங்கள் அனைவரையும் கட்சியின் வாரிசுகளாகவே பார்க்கிறேன். சேலத்தில் சூளுரைப்போம், இந்தியா கூட்டணி வெல்லட்டும்” என பேசினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…