தமிழகம் 2030க்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் எனும் உயரத்தை எட்டும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை.!

Published by
மணிகண்டன்

சென்னையில் இன்று அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட UPS (United Parcel Service) எனும் பன்னாட்டு சரக்கு போக்குவரத்து நிறுவனம் புதிய தொழில் நுட்ப மையத்தை திறந்துள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொன்டு உரையாற்றினார்.

இந்த விழாவில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான அனுமதி கடிதத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதன் பின்னர் அவர் பேசுகையில், அமெரிக்கவை சேர்ந்த UPS போன்ற நல்ல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில்புரிய வருவது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதை காட்டுகிறது.

இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது. இதனை மேலும் மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். இதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் தமிழக்தில் புதிய முதலீடுகள் மற்றும் ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் தங்களை புத்தாக்கம் செய்து கொண்டு வருகின்றன. வளர்ந்து வரும் சரக்கு போக்குவரத்து துறையை மேலும் மேம்படுத்த சென்னையை அடுத்த திருவள்ளூர் மற்றும் கோவையில் பல்முனை தொழில்துறை சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தமிழக அரசின் திறன் மேம்பாட்டு தொழில்துறை மையமானது பன்னாட்டு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. சிப்காட் மையங்களில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2021 – 2022 முதல் தற்போது வரையில்  30க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் நிறுவப்பட்டு அதன் மூலம் 47 ஆயிரத்திற்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இந்த தொழில் வளர்ச்சி அடுத்தடுத்த ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என எதிர்பார்க்கிறேன்.

தமிழ்நாடு மாநில திட்ட குழு தரவுகளின் படி, தனியார் செய்தி நிறுவனத்தில் வெளியான ஆய்வின் படி, கொரோனாவுக்கு பின்னர் நெருக்கடியான சூழலில் ஆட்சி பொறுப்பை ஏற்று தற்போது தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். 2021-2022இல் 5.80 சதவீதமாக இருந்த உள்நாட்டு உற்பத்தி, தற்போது 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா முதலிடமும் தமிழகம் இரண்டாவது இடமும் பெற்றுள்ளது.

2021 – 2022 இந்திய அளவிலான பணவீக்கம் 9.31 சதவீதம் எனவும், 2022-2023 ஆண்டு காலத்தில் 8.82 சதவீதம் எனவும் இருந்தது. அதுவே தமிழகத்தில் , 2021 – 2022 வரையில் 7.92 சதவீதம் எனவும்,  2022-2023 ஆண்டுகளில்  5.97 சதவீதம் என பணவீக்கம் தமிழகத்தில் குறைந்துள்ளது.

இந்த ஆய்வறிக்கையை பார்க்கையில், ஏற்கனவே நிர்ணயித்தது போல  2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை தமிழகம் எட்டும் என்ற நம்பிக்கைவந்துள்ளது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

1 hour ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

1 hour ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

2 hours ago

திருமணம் முடிந்த 10 நாட்களில் கார் விபத்தில் பறிபோன கால் பந்து வீரர் உயிர்.!

சென்னை :  லிவர்பூல் அணிக்காக விளையாடிய போர்ச்சுகலின் நட்சத்திர கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு…

2 hours ago

‘குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்கத் தேவையில்லை’ – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு!!

சென்னை : பஞ்சாப் நேஷனல் வங்கியில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கிறதா? அப்படியானால் உங்களுக்காக ஒரு பெரிய மகிழ்ச்சிகரமான செய்தி. பொதுவாக,…

4 hours ago

செஸ் உலகக்கோப்பை தொடரில் வெண்கலம் வென்று அசத்திய தமிழ்நாட்டு சிறுமி!

படுமி: இந்த ஆண்டு ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்ற 8, 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட பிரிவுகளுக்கான FIDE உலகக் கோப்பை…

4 hours ago