மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் வைத்து முதல்வர் பழனிச்சாமி சந்திக்க உள்ளார் .
மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தேசியத் தலைவருமான அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தமிழகத்தில் மெட்ரோ ரயில் திட்டம், உயர்மட்ட சாலை திட்டம்,சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளிட்ட ரூ.67,378 கோடியிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட சென்னை வரும் அமித்ஷாவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் சம்பத் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
மேலும், அமித்ஷா, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று இரவு ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.அதில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் , தேர்தல் பணிகள் குறித்தும் பேச உள்ளதாக கூறப்படுகிறது.அதனை தொடர்ந்து அமித்ஷா தங்கியுள்ள சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று இரவு முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.அந்த சந்திப்பில் 7 பேர் விடுதலை,வேல் யாத்திரையால் ஏற்பட்ட மோதல் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அடுத்த நாள் காலை 10 மணிக்கு அமித்ஷா டெல்லிக்கு புறப்படுவதாக கூறப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…