ஆளுநரை சந்திக்க முதலமைச்சர் தயார் – தமிழக அரசு

Published by
லீனா

கடந்த டிச 1-ஆம் தேதி ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்ற நீதிபதி, ஆளுநரும் முதல்வரும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். ஆளுநர் முதலமைச்சரிடையே பல்வேறு விவகாரங்களுக்கு தீர்வு காண வேண்டி உள்ளது.  முதலமைச்சருடன் ஆளுநர் அமர்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு கண்டால் வரவேற்போம்.

பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக முதலமைச்சருக்கு ஆளுநர் அழைப்பு விடுப்பது சரியாக இருக்கும். முட்டுக்கட்டைக்கு ஆளுநர் தீர்வு காணாவிட்டால் நாங்கள் உத்தரவிட நேரிடும் என  தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கை இன்று விசாரணைக்கு ஒத்தி வைத்திருந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..!

அப்போது தமிழக அரசு தரப்பில், நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்தவுடன் அவசர அவசரமாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு தமிழ்நாடு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார் இதை எப்படி ஏற்றுக் கொள்வது? என கேள்வி  எழுப்பியதோடு, மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்திக்க முதல்வர் தயாராக இருக்கிறார் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தலைமை நீதிபதி, ஆளுநர் தரப்பிலிருந்து ஏதாவது சில முன்னேற்றங்களை நாங்கள் எதிர்பார்க்கிறோம்; ஏன் எல்லா விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் நினைக்கிறார். முதல்வரும் ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்சனைகளை தீர்வுக்கு கொண்டு வர வேண்டும் என நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 3-வது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல்  அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அத்துமீறிய பாகிஸ்தானின் ட்ரோன்கள்? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…

14 minutes ago

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

16 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago