சென்னை:தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ளதன் காரணமாகவும்,மாநிலம் முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையிலும் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் உள்ளிட்ட உயர் மருத்துவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெறவுள்ளது.
முன்னதாக கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை முதல்வர் அறிவித்திருந்தார்.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.இந்த நிலையில்,நாளை காலையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளுடன் நாளை முதல்வர் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,981 ஆக இருந்த நிலையில்,அந்த எண்ணிக்கை நேற்று 2 ஆயிரம் அதிகரித்து 10,978 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
டெல்லி : சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து. அது என்ன எச்சரிக்கை என்றால், பொதுமக்கள் அளிக்கும்…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி,…
நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ், மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து நடத்தவுள்ள ஆக்ஸியம்-4 (Ax-4) திட்டம், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) நான்கு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, 2025 மே 12 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து…
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…