சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகநாடுகள் அனைத்தும் சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனை செய்ததுக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்று அறிவித்தது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவை உலக நாடுகள் தனிமை படுத்தியுள்ளன. அந்த வகையில்
சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் 42 வயதான வு சென் சூ என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரம் செல்வதற்கு நேற்று இரவு (சனிக்கிழமை) மதுரை விமான நிலையம் வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர். அப்போது இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உதவியுடன் மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிலையில், வு சென் சூ வை சுகாதர குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும், இந்திய அரசு அறிவுருத்தலின் அங்கிருந்து உடனடியாக அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…