திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். ஆசிரியர்கள் தடுத்தும் இந்த மோதல் நடைபெற்றதால் கல்லூரியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் இந்த மோதலுக்கு காரணமான 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மதுரைக்கிளை, அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு எப்.ஐ.ஆரை ரத்து செய்ததோடு, திருச்சி அரசு மருத்துவமனையை ஒருநாள் சுத்தம் செய்யவும் உத்தரவிட்டது. அதன்படி 28 மாணவர்களும் அரசு மருத்துவமனைக்கு வந்து, வளாகத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், இலை சருகுகளையும் சுத்தப்படுத்தியதோடு, பொது வார்டையும் சுத்தப்படுத்தினர். இதனிடையே நீதிமன்றம் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இதுபோன்று வித்தியாசமான தண்டனையை கொடுத்ததுக்கு பலதரப்பு மக்களிடம் இருந்து பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளது.
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…