Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட வல்லுனர்கள் மற்றும் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
அமலாக்கத்துறையிலானரால் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ரவி நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த அறிவிப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து இருந்தனர்.
இந்நிலையில், தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் அறிவிப்பை ஆளுநர் ரவி நிறுத்தி வைத்து இருப்பதாகவும், இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை தொடர்ந்து ஆளுநர் விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அமைச்சர்கள் உடன் ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமான தலைமை செயலக சட்ட அலுவல் பணிகள் முடிந்தவுடன் இந்த ஆலோசனை தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது . ஏற்கனவே, ஆளுநர் விவகாரம் தொடர்பாக சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…