உங்கள் துறையில் முதலமைச்சர்’ திட்டத்தின் கீழ் 1,353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.விரும்பிய இடத்திற்கு செல்வதால் காவலர்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவலர்களின் நலன்காக்க மாவட்ட, மண்டல அளவில் குறைகள் கேட்கப்பட்டு வருகிறது.
அதன்படி,சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள டிஜிபி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு காவலர்களிடம் குறைகளை கேட்டறிந்து,அவர்களின் பணி மாறுதல் விருப்பம் தொடர்பான மனுக்களை பரிசீலனை செய்தார்.
இந்நிலையில்,”உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ் 1353 காவலர்களுக்கு சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக காவல்துறை தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் மாவட்ட¸ மண்டல அளவில் காவலர்கள் குறைகள் கேட்கப்பட்டு காவல்துறைத் தலைமை இயக்குநர் அளவில் மனுக்களை பரிசீலனை செய்து 1353 காவலர்களுக்கு அவர்கள் விருப்பத்தின் படி சொந்த மாவட்டங்களுக்கு பணி மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளது.
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…
திருவள்ளூர் :மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம்…