annamalaimkstalin bjp [Image-TH]
தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால், பாஜக அரசு 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார் என தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், இன்று பொதுநிகழ்வில் பேசியபோது, நமது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.
அதனால் நமது திட்டத்தை விமர்சிக்கின்றனர். 2014இல் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் கொடுத்த வாக்குறுதியில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவதாக அறிவித்தது என்னானது என்றும், 15 ஆயிரம் கூட வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவீட்டில், வெளிநாடுகளில் அவ்வளவு பணம் ஊழல்வாதிகள் பதுக்கிவைத்துள்ளனர் என்று தான் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார், அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.
திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும், 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் திமுகவுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்.
சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…
சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…
விருதுநகர் : அருப்புக்கோட்டையில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் ஜூலை 10, 2025 அன்று நிகழ்ந்த கோர…
சென்னை : நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சென்னை புழல் மத்திய சிறையில்…
நமீபியா : பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் பயணத்தின் இறுதி கட்டமாக, நேற்றைய தினம் நமீபியா சென்று சேர்ந்துள்ளார்.…