பிரதமர் 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் கூறுகிறார்; அண்ணாமலை.!

Published by
Muthu Kumar

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால், பாஜக அரசு 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார் என தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், இன்று பொதுநிகழ்வில் பேசியபோது, நமது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.

அதனால் நமது திட்டத்தை விமர்சிக்கின்றனர். 2014இல் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் கொடுத்த வாக்குறுதியில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவதாக அறிவித்தது என்னானது என்றும், 15 ஆயிரம் கூட வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அண்ணாமலை பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவீட்டில், வெளிநாடுகளில் அவ்வளவு பணம் ஊழல்வாதிகள் பதுக்கிவைத்துள்ளனர் என்று தான் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார், அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.

திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும், 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் திமுகவுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஆசிய கோப்பையில் இருந்து இந்தியா விலகலா? பிசிசிஐ சொல்வதென்ன?

டெல்லி : ஆசியக் கோப்பையில் இருந்து இந்தியா விலகுவதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். அடுத்த…

8 minutes ago

சர்ச்சை பேச்சு: ”மன்னிப்பை ஏற்க முடியாது” – அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்.!

டெல்லி : பஹல்காமில் நமது மகள்களின் நெற்றிக் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சொந்த சகோதரியைக் கொண்டே பாடம் கற்பித்துள்ளோம் என…

1 hour ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.? தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்.!

சென்னை : மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.…

1 hour ago

காருக்குள் கருகிய நிலையில் சடலம்.., தூத்துக்குடி அருகே பெரும் பரபரப்பு.!

தூத்துக்குடி மாவட்டத்தில், காருக்குள் கருகிய நிலையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு…

1 hour ago

தமிழ்நாட்டில் மஞ்சள் எச்சரிக்கை! இன்றும், நாளையும் மிக கனமழை – வானிலை மையம்.!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி…

2 hours ago

சடசடவென திருமணத்திற்கு ரெடியாகும் விஷால்! பொண்ணு இந்த நடிகையா?

சென்னை : நடிகர் விஷால் எதாவது நிகழ்ச்சிக்கு சென்றாலே அவரிடம் அடுத்த என படம் நடிக்கிறீர்கள் என்று கேட்பதை விட உங்களுக்கு…

4 hours ago