பிரதமர் 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் கூறுகிறார்; அண்ணாமலை.!

Published by
Muthu Kumar

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முதல்வர் ஸ்டாலினுக்கு தேர்தல் பயம் வந்துவிட்டதால், பாஜக அரசு 2014இல் கொடுக்காத வாக்குறுதிகளையெல்லாம் கொடுத்ததாக முதல்வர் ஸ்டாலின் பேசிவருகிறார் என தெரிவித்துள்ளார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின், இன்று பொதுநிகழ்வில் பேசியபோது, நமது திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவது சிலருக்கு எரிச்சலை ஊட்டுகிறது.

அதனால் நமது திட்டத்தை விமர்சிக்கின்றனர். 2014இல் பாஜக அரசு ஆட்சிப் பொறுப்பேற்கும் முன் கொடுத்த வாக்குறுதியில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக்கணக்கில் 15 லட்சம் வழங்குவதாக அறிவித்தது என்னானது என்றும், 15 ஆயிரம் கூட வழங்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதற்கு அண்ணாமலை பதிலளித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் தனது டிவீட்டில், வெளிநாடுகளில் அவ்வளவு பணம் ஊழல்வாதிகள் பதுக்கிவைத்துள்ளனர் என்று தான் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார், அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என கூறவில்லை என்று பதிலளித்திருக்கிறார்.

திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என்று பிரதமர் குறிப்பிடவில்லையே, தங்களுக்கு ஏன் இவ்வளவு பதட்டம் வருகிறது என்று கேள்வி எழுப்பிய அண்ணாமலை, கடந்த 9 ஆண்டுகளில், 1.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும், 11 கோடி விவசாய பெருங்குடி மக்களுக்கு வருடம் 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதும் திமுகவுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சர்யம் தான் என்றும் பதிவிட்டிருக்கிறார்.

Published by
Muthu Kumar

Recent Posts

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

5 minutes ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

30 minutes ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

58 minutes ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

3 hours ago

“சங்கிகளின் மகிழ்ச்சிக்காக பேசுகிறார் இபிஎஸ்” – எடப்பாடி பழனிசாமிக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : கோவையில் தனது பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ''கோவில் நிதியில் இருந்து கல்லூரி…

3 hours ago

அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில்…

4 hours ago