தலைவர் கலைஞர் மீதான அதே அன்போடு என்னை வரவேற்றார்.! லாலுபிரசாத் யாதவ் குறித்து முதல்வர் நெகிழ்ச்சி பதிவு.!

Published by
மணிகண்டன்

தலைவர் கலைஞர் மீதான அதே அன்போடு என்னை வரவேற்றார் என லாலுபிரசாத் யாதவ் உடனான  சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவீட் செய்துள்ளார்.

பீகார் முதல்வரும் ஜனதா ஜன கட்சி தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் இன்று பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட பாஜாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டுள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த கூட்டத்தில் திமுக சார்பாக கலந்து கொள்ள உள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று தனி விமானம் மூலம் பாடினா புறப்பட்டார். அங்கு அவர் ராஷ்டிரிய ஜனதா தள மூத்த தலைவர் லாலு பிரசாத் யாதவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில், முதுபெரும் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவரது இல்லத்தில். தலைவர் கலைஞர் மீது அவருக்கு இருந்த அதே அளவு பாசத்தை நாம் அனைவரும் அறிவோம், அதே அரவணைப்புடன் அவர் என்னை வரவேற்று, சமூக நீதியின் ஜோதியை உயர்த்த வாழ்த்தினார். அவர் நம் அனைவருக்கும் வழிகாட்ட நீண்ட ஆயுளோடு இருக்க வாழ்த்தினேன். நாளை (இன்று) வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற உள்ளது. என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இது வெஸ்ட் இண்டீஸ் போகாத”…ரோஹித் எச்சரிக்கையை மீறி சென்ற புஜாராவுக்கு நடந்த மர்ம சம்பவம்?

சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு…

45 minutes ago

அதிமுக கூட்டணியில் பல கட்சிகள் வரும்..இபிஎஸ் பேச்சு!

சென்னை : தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் காட்சிகள் அனைத்தும் தீவிரமாக தயாராகி வருகிறது.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான…

2 hours ago

மஸ்க் உடனான உறவை நீட்டிக்க விருப்பம் இல்லை – ட்ரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலன் மஸ்க் இடையே ஏற்பட்ட வார்த்தை மோதல்…

2 hours ago

பெங்களூர் கூட்ட நெரிசல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்!

பெங்களூர் : ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த…

3 hours ago

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

15 hours ago