சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 20,000 மையங்களில் கொரோனா தடுப்பு ஊசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 1,600 மையங்களில் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்நிலையில், சைதாப்பேட்டையில் நடைப்பெறும் மெகா தடுப்பூசி முகாமில் சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…