கோவை :11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வழக்கில் மேலும் ஒருவர் கைது

Published by
murugan
  • கடந்த மாதம் 26-ம் தேதி பூங்கா ஒன்றில் 11-ம் வகுப்பு மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.
  • கைது செய்யப்பட்ட 6 பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் உள்ளனர். தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த மாதம் 26-ம் தேதி கோவை கீரநாயக்கன் பாளையத்தில் உள்ள பூங்கா ஒன்றில் தனது காதலனுடன்  11-ம் வகுப்பு மாணவி ஒருவர் பேசி கொண்டு இருந்தபோது. அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த மாணவியின் காதலனை தாக்கி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.

அதில் ஒரு  நபர் வீடியோ எடுத்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் , பிரகாஷ், கார்த்திகேயன் , நாராயணமூர்த்தி ஆகிய 4 பேரை முதல் கட்டமாக 28-ம் தேதி காவல்துறையினர் கைது செய்தனர். அதில் மீதம் உள்ள இரண்டு பேரில்  முக்கிய குற்றவாளி மணிகண்டன் என்பவரை தேடி வந்த நிலையில் கடந்த 3-ம் தேதி கோவை மகிளா நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

இதற்கிடையில் மற்றொரு குற்றவாளியான பப்ஸ் கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும்  குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மற்றொரு மணிகண்டன் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர்.இதையெடுத்து  நேற்று மணிகண்டனையும் போலீசார் கைது செய்தனர்.

 

Published by
murugan

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

6 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

7 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

9 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

10 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

10 hours ago