மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர் இன்று அதிகாலையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில்,முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளரும்,இடதுசாரி சிந்தனையாளருமான தோழர் இரா.ஜவகர்,மகளிர்தினம் உண்மை வரலாறு உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.மேலும்,அவர் எழுதிய,”கம்யூனிசம்-நேற்று இன்று நாளை” எனும் நூல் அதிக பிரதிகளை விற்று சாதனை படைத்தது.
இந்நிலையில்,தோழர் இரா.ஜவகர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை தோழர் இரா.ஜவகர் உயிரிழந்தார்.
இதனையடுத்து,அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது,”மூத்த பத்திரிக்கையாளரும், பொதுவுடைமைச் சிந்தனையாளருமான திரு.இரா.ஜவகர் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரிதும் வேதனை அடைந்தேன்.அவரது மறைவு முற்போக்கு சிந்தனை உலகிற்குப் பேரிழப்பாகும்.
இளம் பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்த இரா.ஜவகர் அவர்கள்,அரிய நூல்களைப் படைத்தளித்தவர் என்பதுடன்,தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும்,மாறாத பற்றும் கொண்டவர்.
அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர்,நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள்,பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து,மறைந்த தோழர் இரா.ஜவகர் அவர்களின் குடும்பத்தினர்க்கு,பத்திகையாளர்கள்,அரசியல் தலைவர்கள் போன்றோர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக,தோழர் இரா.ஜவகர் அவர்களின் மனைவியான பேராசிரியர் பூரணம் அவர்களும்,கடந்த ஆண்டு 14.9.2020 இல் கொரோனாவால்தான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…