AR Rahman Concert : ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி… காவல்துறையின் தோல்வி.! இபிஎஸ் கடும் குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

இசையமைப்பார் ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை பனையூர் பகுதி கிழக்கு கடற்கறை சாலையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் பிரமாண்ட இசைகச்சேரியை கடந்த ஞாயிற்று கிழமை நடத்தினார். பிரமாண்டமாக நடைபெற்ற இந்த இசைக்கச்சேரி அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் ரசிகர்கள் திரண்ட காரணாதாலும், காவல்துறைக்கு உரிய தகவல் தெறிக்கப்படாததாலும், இசை கச்சேரிக்கு வந்தவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய சரியான வசதி இல்லாமல், உரிய இருக்கைகள் இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

இதனை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல் விட்ட காரணத்தை கருத்தில் கொண்டு, அந்த சமயம் பணியில் இருந்த உயர் காவல்துறை அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டு இருந்தது. இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் விமர்சனங்களையும், கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இசை நிகழ்ச்சி குளறுபடிக்கு காவல்துறை தோல்வியே காரணம் என தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பாக, இசை கச்சேரிக்கு போக்குவரத்துக்கு காவல்துறை உரிய முனிதிட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு விட்டது.

இதில், திமுக அரசின் காவல்துறை தோல்வி அடைந்ததை காட்டுகிறது. உரிய திட்டமிடல் இருந்திருந்தால், இவ்வளவு பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்காது என குறிப்பிடப்பிட்டு உள்ளார். மேலும்  கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற்ற அதிமுக மாநாட்டிற்கு காவல்துறை உரிய பாதுகாப்பது வழங்கவில்லை.

திமுக பொறுப்பேற்ற கடந்த 28 மாதங்களாக தமிழகத்தில் உளவுத்துறை செயல்படாமல் இருக்கிறது. அதன் காரணமாக தான் பல்வேறு கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெபெற்று வருகிறது. கடந்த 12 நாட்களில் மட்டும் 40 கொலைகள் தமிழகத்தில் நடைபெற்றுள்ளன. போதை பொருட்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது என ஆளும் திமுக அரசு மீதும், தமிழக காவல்துறை மீதும் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஆந்திராவில் பணி நேரம் 10 மணி நேரமாக நீட்டிப்பு! வலுக்கும் எதிர்ப்புகள்.!!

ஆந்திராவில் தனியார் நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் ஊழியர்களின் பணி நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தி சட்ட திருத்தம் கொண்டுவந்தது…

4 hours ago

மகாராஷ்டிரா தேர்தல்: ”வாக்குச் சாவடிகளின் சிசிடிவி காட்சிகளை வெளியீடுக” – ராகுல் காந்தி வலியுறுத்தல்.!

மகாராஷ்டிரா : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, கடந்த 2024ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் குறித்து…

5 hours ago

டெஸ்லா காரை விற்க போகும் டிரம்ப்.? வெள்ளை மாளிகையில் நிறுத்தப்பட்ட சிகப்பு கார்.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து…

6 hours ago

“நிர்வாகத் திறனற்ற ஆட்சிக்கு கிளாம்பாக்கமே சாட்சி”- எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!

சென்னை :  கடந்த சில தினங்களாக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால், சென்னையில் இருந்து சொந்த…

6 hours ago

நகைக்கடன் விதிகளில் மாற்றம்! புதிய விதிமுறைகள் என்னென்ன? விவரித்த எம்.பி. சு.வெங்கடேசன்.!

சென்னை : தங்க நகைக்கடன் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியிட்ட…

6 hours ago

”கொரோனா வந்தால் சமாளிக்கத் தயார்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.!

சென்னை : நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 391 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாயுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர்…

7 hours ago