இனி மெட்ரோ தான் சென்னையின் அடையாளம்… ரெடியானது ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ பிளான்.!

Published by
மணிகண்டன்

Chennai Metro : சென்னையில் தற்போது 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் முழு வீச்சில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக 63,246 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 2026க்குள் முடித்து 2027ஆம் ஆண்டு 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முனைப்பில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Read More – அங்கித் திவாரிக்கு இடைக்கால ஜாமீன்.! தமிழக அரசு கடும் எதிர்ப்பு.!

119 மெட்ரோ நிலையங்கள் :

2ஆம் கட்ட மெட்ரோ திட்டத்தின் கீழ், 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாதவரம் முதல் சிப்காட் வரையில், மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையில் என மொத்தம் 116கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் மொத்தம் 119 மெட்ரோ நிலையங்கள் அமைய உள்ளதாக குறிப்பிப்பட்டுள்ளது.

பூமிக்கடியில் மெட்ரோ :

இதற்கான ஒப்பந்தப்புள்ளி வரைவு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், மாதவரம் முதல் தரமணி இடையில் உள்ள தூர பாதை பூமிக்கடியில் சுரங்கப்பாதையிலும், சிப்காட் கடைசி நிலையம் பகுதியில் மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளது என்றும்,

Read More – 5000 ரூபாய் பணம்.? 2 சிறுவர்களை கொடூரமாக வெட்டி கொலை செய்த கொடூரன்.!

3 இடத்தில் கட்டிடத்திற்குள் ரயில் :

கோயம்பேடு, திருமங்கலம், மைலாப்பூர் ஆகிய பகுதியில் கட்டிடத்திற்குள் மெட்ரோ ரயில் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக முதற்கட்டமாக திருமங்கலம் பகுதியில் மேம்பாலம், அடுக்குமாடி கட்டிடம் அமைக்க அப்பகுதியில் உள்ள 3 வீடுகள் கொண்ட 450 மீட்டர் பரப்பளவு கொண்ட இடத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

3வது மாடியில் மெட்ரோ ரயில் :

திருமங்கலம் பகுதியில் கட்டிடத்திற்குள் புகுந்து செல்லும்படி அமைக்கப்பட உள்ள கட்டிடத்தில் 3வது மாடியில் ரயில் செல்லும் என்றும் 4வது மாடியில் ரயில் நிலையம் அமையும் என்றும், இதில் மொத்தம் 12 மாடிகள் கட்டப்பட உள்ளது என்றும்,  அந்த 12 மாடிகளில் பல்வேறு அங்காடிகள் கொண்ட ஷாப்பிங் மால் கட்டப்பட உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

5 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

5 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

6 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

7 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

8 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

8 hours ago