தமிழகத்தில் இன்று 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 412 ஆண்களும், 257 பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மேலும் இன்று 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மொத்தம் எண்ணிக்கை 7,204 ஆக அதிகரித்துள்ளது. இதில் சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், அங்கு மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,839 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் இன்று 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் இன்று 135 பேர் வைரஸில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட 7,204 பேரில் 1,959 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
இன்று கொரோனா கண்டறியப்பட்ட 669 பேரில் ஆண்கள் 412 பேரும், பெண்கள் 257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 7,204 பேரில் 4,905 பேர் ஆண்களும், 2,295 பேர் பெண்களும் கொரோனா வைரசுக்கு ஆளாகியுள்ளனர். மேலும் இதுவரை மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் மொத்தம் 53 உள்ளது. இதில், அரசு மருத்துவமனையில் 37 ஆய்வகங்களும், தனியார் மருத்துவமனையில் 16 ஆய்வகங்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…