முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா இல்லை- காவல்துறை விளக்கம்

Published by
Venu

முதல்வர் பழனிசாமி வீட்டின் அருகே பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என காவல்த்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை கோயம்பேடு சந்தையை மையமாக வைத்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.கொரோனா பரவி வரும் சமயத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதுஇதனால் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.ஒரு சில இடங்களில் காவலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.இது சற்று காவலர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே சென்னையில் முதலமைச்சர் பழனிசாமி இல்லத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலருக்கு கொரோனா பரவியது என்று வதந்தி வெளியாகியது.இந்நிலையில் இது குறித்து சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கத்தில்,கொரோனா பரவியதாக கூறப்படும் பெண் காவலர்   முதலமைச்சர் இல்லத்தில் பணிபுரியவில்லை.அவர் கிரீன் வேஸ் சாலையில் 30-ஆம் தேதி வரை பணியில் இருந்தார்.அதன் பிறகு அங்கு அவர் பணியில் இல்லை.பின்னர் 3-ஆம் தேதியன்று ஜெயந்தி என்ற அந்த காவலருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 6 -ஆம் தேதி அன்று அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக தெரிவித்ததின்பேரில்  , காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.

எனவே பெண் காவலருக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்திகள்  உண்மையில்லை என தெளிவுபடுத்தப்படுகிறது. அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Published by
Venu

Recent Posts

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து.., கேட் கீப்பர் சிறையில் அடைப்பு.!

கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…

14 minutes ago

இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% கூடுதல் விரி விதித்த அமரிக்க அதிபர் டிரம்ப்.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…

52 minutes ago

திருவாரூரில் மாவட்டத்தில் இன்றும், நாளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு.!

திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

1 hour ago

தமிழகத்தில் இன்று வழக்கம்போல் பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.!

சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…

1 hour ago

நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்.., தமிழ்நாட்டில் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பா.?

சென்னை : இன்று (ஜூலை 9, 2025) இந்தியா முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு…

2 hours ago

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

12 hours ago