மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதன்காரணமாக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பின்னர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேளச்சேரி வேட்பாளரான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதனைதொடர்ந்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்பொழுது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், டிஜிட்டல் முறையில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
அமெரிக்கா : சர்வேதேச விண்வெளி மையத்துக்கு செல்வதற்காக ஆக்சியம் எனும் தனியார் நிறுவனம் இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து 'ஆக்சியம்…
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…