சென்னையில் அம்மா உணவகத்தில் பணிபுரிந்த பெண் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையாமல் தினந்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதன்படி நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று மட்டும் 266 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் பாதித்தவர்களின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் காரணத்தால் நேற்று மட்டும் 203 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே சென்னையில் அம்மா உணவகத்தில் பணியாற்றும் 52 வயதான பெண் பணியாளர் ஒருவருக்கு கொரானா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அந்த பெண் பணியாளர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இங்கிருந்து வெளியூர் சென்றவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…