தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைப் பொருத்தவரையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது பொது முடக்கம் போடும் சூழ்நிலை இல்லை. இரண்டு வாரங்கள் மக்கள் வீட்டிலிருந்து யாரால் வேலை பார்க்க முடியுமோ, அவர்கள் தாமாக முன்வந்து வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம் என்றும், அரசு உத்தரவிட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது நோயாளிகளுக்கு தேவையான வெண்டிலேட்டர் உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 81 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தில் இதுவரை மாஸ்க் போடாத 2.39 லட்சம் பேரிடம் இருந்து, ரூ.5.7 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின்…
கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…
இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…
சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…
இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…
சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…