கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை காவு வாங்கி வரும் நிலையில் இந்நோய் பரவாமல் தடுக்க பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தனிகவனம் செலுத்தி ஈடுபட்டு உள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள் பட தமிழ்நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களில் தற்போது கூட்டம் குறைய தொடங்கி உள்ளது. எப்போதும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். ஆனால் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னையில் உள்ள பெரும்பாலான வணிக வளாகங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடவில்லை. தியேட்டர்களிலும் ரசிகர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை தியாகராயர் நகர் ரெங்கநாதன் தெருவிலும் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்பட்டது. கொரோனோ எதிரொளியாக தமிழ்நாடு முழுவதும் இந்நிலையே நிலவுகிறது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…