தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக் கட்டணம்- தமிழக அரசு அரசாணை வெளியீடு..!

Published by
Edison

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில்,பொது மக்களின் நலன் கருதி கொரோனா சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே ஏற்கும் என்று சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதில்,

கொரோனா சிகிச்சைக்கான கட்டணம்:

  • தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் உதவி இல்லாமல் – ரூ.5000 கட்டணமாகும்.
  • தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸிஜன் உதவியுடன்- ரூ.15000 கட்டணம் ஆகும்.
  • தீவிர கொரோனா சிகிச்சைக்கு,வெண்டிலேட்டர் வசதியுடன்- ரூ.35000
  • தீவிர கொரோனா சிகிச்சைக்கு,வெண்டிலேட்டர் வசதி இல்லாமல் – ரூ.30000
  • தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சைக்கு – ரூ.25000 கட்டணமாகும்.

அதன்படி,பொதுமக்களின் சிகிச்சை கட்டணம் முழுதும் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசே செலுத்தி விடும்.

மேலும்,மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இல்லாதவர்களுக்கு,தீவிரமல்லாத கொரோனா சிகிச்சைக்கு,A1 & A2 போன்ற உயர்தர மருத்துவமனைகளில்  ஆக்ஸிஜன் உதவி இல்லாமல்,ரூ.7500 மற்றும் A3 to A6 மருத்துவமனைகளில்  ரூ.5000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே,தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் பெற்றால்,பொதுமக்கள் 1800 425 3993 / 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் 24 X 7 புகார்களை அளிக்கலாம்.

அவ்வாறு,புகார்கள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் தமிழக அரசால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Recent Posts

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

15 minutes ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

47 minutes ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

1 hour ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

1 hour ago

போதைப்பொருள் விவகாரம்: ‘Code Word-ல்’ பேசியது அம்பலம்.., நடிகர் கிருஷ்ணா கைது.!

சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…

2 hours ago

”ஓரவஞ்சனை செய்கிற மத்திய அரசால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை மறைக்க முடியவில்லை” – மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…

2 hours ago