தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று புதிதாய் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையடுத்து, தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிகிச்சைக்கான கட்டண விபரங்களை வெளியிட்டார்.
அதில் அவர், அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறியுள்ளவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 சிகிச்சை கட்டணம் வசூலிக்கலாம் எனவும், தீவிர சிகிச்சை பிரிவில் அணைத்து வசதிகளுடன் நாளொன்றுக்கு ரூ. 10,000-15,000 வரை சிகிச்சை கட்டணமாக வசூலிக்கலாம் என அந்த அறிவிப்பில் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அரசு காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணமே செலுத்த தேவையில்லை எனவும், தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகளை அரசு காப்பீட்டின் கீழ் கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவித்தார்.
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…
ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…
சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…