திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், பரிசோதனை செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக்கொண்டே செல்கிறது. இதனால், கொரோனா பரிசோதனை மையங்களை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூரில் அரசு மருத்துவமனையில் 1.5 கோடி செலவில் கொரோனா பரிசோதனை மையம் (PCR டெஸ்டிங் லேப்) அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருப்பத்தூரில் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் விரைவாக நிறைவடையும் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதற்கு முன்னர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தருமபுரி மாவட்டதிலுள்ள கொரோனா பரிசோதனை மையத்திற்கு அனுப்பிவைக்கப்படும், இதனால், முடிவு தெரிய நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகும்.
இனி திருப்பத்தூரில் கொரோனா பரிசோதனை செய்பவர்களின் முடிவு விரைவில் தெரியவரும் என திருப்பத்தூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…