சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பலி.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் என்பவர், பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
பின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 30ம் தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மூச்சு திணறல் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடலை, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் வினோத் பெற்றோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இவரது உடல், பட்டினப்பாக்கத்தில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், 33 வயதான மருத்துவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…