சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த இதய அறுவை சிகிச்சை மருத்துவர் பலி.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், சென்னையில், பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் வினோத் என்பவர், பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
பின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றி வந்த இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறல் பிரச்னை இருந்துள்ளது. கடந்த 30ம் தேதி இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், இவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மூச்சு திணறல் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று முற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரது உடலை, சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவகிருஷ்ணனிடம் தனியார் மருத்துவமனை நிர்வாகம், டாக்டர் வினோத் பெற்றோர் முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இவரது உடல், பட்டினப்பாக்கத்தில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மேலும், 33 வயதான மருத்துவர் உயிரிழந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…