கொல்ல துடிக்கும் கொரோனா..பள்ளிகளுக்கு விடுமுறை வழக்கு.?? உயர்நீதிமன்றம் உத்தரவு

Published by
kavitha

கொரோனா வைரஸ் பரவி வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிதுள்ளது.

Image result for பள்ளி குழந்தைகள்

உலகம் முழுவதும் தனது கொடூரத்தால் அச்சுருத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொது மக்களை பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை மத்திய மற்றும்  மாநில அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில் கொரோனா தொடர்பான மருத்துவ அறிவுறுத்தல்களை பள்ளி செல்லக்கூடிய குழந்தைகள் பின்பற்ற முடியாது என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள நர்சரி முதல் உயர்நிலை பள்ளி வரை விடுமுறை அறிவிக்கும் படி உத்தரவிடக் கோரி ராஜவேலு என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுவாக  தாக்கல் செய்தார்.

மேலும் அவர் இந்த மனுவில் கொரோனா குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தான் எளிதில் தாக்குகிறது எனவே குழந்தைகளை பாதுகாக்க தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பியும் , எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக பக்கத்து மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மேலும் 2019-20ம் கல்வியாண்டானது முடிவடைய உள்ளதால், விடுமுறை அறிவிப்பதால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று  தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மனுவை தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டு உள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி என்று ஏதும் இல்லை  என்று கூறிய அவரின் வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது அதனோடு இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது என்று  உத்தரவிட்டனர். கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில்  பரவாமல் இருக்க தேவையான அனைத்து  நடவடிக்கைகளையும்  தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் இவ்வழக்கை முடித்து வைத்தனர்.

Published by
kavitha

Recent Posts

பயணிகள் கவனத்திற்கு.., நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடல்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…

17 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்! பள்ளி, கல்லூரிகள் மூடல்., அரசு ஊழியர்கள் விடுமுறை ரத்து!

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…

46 minutes ago

விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…

1 hour ago

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

9 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

9 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

10 hours ago