அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று அத்தகைய அதிக மக்களை கொண்ட ஒரு நாட்டில் நுழைந்த கொடூர கொரோனா வைரஸ் அந்நாட்டை வாட்டி வதைத்து வருகிறது.இது படிப்படியாக உலக நாடுகளிலும் பரவி வருவது தான் அதிர்ச்சி செய்தியாக உள்ளது.உலக சுகாதாரதுறைக்கே இந்த வைரஸ் சவால் விடும் வகையில் அசுர வேகத்தில் பரவி வருகிறது.இந்த வைரஸை தடுக்க நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்ற அதே வேளையில் சீனாவில் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே உள்ளது.அங்கு இந்நோய் பாதிப்பு மட்டும் 230 சீனர்கள் உயிரிழந்துள்ளனர்.இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும் இந்நோய் காரணமாக சீனாவும் கடும் உளைச்சலை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா நுழைந்து விட்டது. கொரோனா அறிகுறியுடன் ஒரு சீனர் உட்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி திருவண்ணாமலை மற்றும் திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மருத்துவமனைகளில் இந்த அறிகுறியோடு 3 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் சீனர் என்பது குறிப்பிடத்தக்கது அவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…