கள்ளச்சாராயம் விவகாரம் – புகார் எண் அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் எண்ணை அறிவித்தது விழுப்புரம் காவல்துறை.

கடந்த சில நாட்களாக கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் அரசு மருத்துவமனைகளில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக கைது நடவடிக்கையையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 நாட்களாக நடந்த சாராய வேட்டையில், 1558 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 4943 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் டிஜிபி தகவல் தெரிவித்திருந்தது.

மேலும், விழுப்புரம், செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பித்தது. இந்த நிலையில், கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக புகார் எண்ணை அறிவித்தது விழுப்புரம் காவல்துறை.

அதன்படி, கள்ளச்சாராயம், விஷச்சாராயம் மற்றும் அயல் மாநில மதுபானங்கள் விற்பனை குறித்து “9042469405” என்ற வாட்சப் எண்ணிற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது. தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் பாதுகாக்கப்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கன்னட விவகாரம்: கமல்ஹாசனுக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு.!

கர்நாடகா : 'தக் லைஃப்' திரைப்பட நிகழ்ச்சியில் கமலின் கருத்துகள் கடும் எதிர்ப்புகளை பெற்று வருகிறது. அதாவது, சென்னையில் அண்மையில் நடைபெற்ற…

48 minutes ago

கோவை – நீலகிரிக்கு மீண்டும் ரெட் அலர்ட்.! 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!

சென்னை : நேற்று காலை ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, வடக்கு…

1 hour ago

நடிகர் ராஜேஷ் மறைவு – திருமா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!

சென்னை : நடிகர் ராஜேஷ் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். சென்னையிலுள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரின்…

2 hours ago

”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த…

2 hours ago

பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள்…

3 hours ago

”தாயை அடிக்க முயன்றவர்.., வளர்த்த கிடா மார்பில் எட்டி உதைத்து” – ராமதாஸ் அடுக்கடுக்காய் குற்றச்சாட்டு.!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே…

3 hours ago