பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!

சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகிய பாமக முகுந்தன், அன்புமணியே தங்களின் எதிர்காலம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

PMK Mukundan

சென்னை : விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” உங்கள் தாயை நீங்கள் கடவுள் என சொல்வீர்கள். பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டார்.

அப்படி கேட்டதும் ஒரு பொருளை தூக்கி அம்மா மீது அடித்தார். நல்ல வேளையாக அது அவர் மீது படவில்லை. இது எல்லாம் ஒரு சேம்பிளாக தான் கூறுகிறேன்” என்று விரிவாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். பாமக இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்து  முகுந்தன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த ராஜினாமா கடிதத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு முகுந்தன் அனுப்பி வைத்தார். சொந்தக் காரணங்களுக்காக பாமக இளைஞர் சங்க பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக முகுந்தன் குறிப்பிட்டுள்ளார்.  அன்புமணி ராமதாஸ்தான் தங்களின் எதிர்காலம் என்ற உணர்வுடன் கட்சிப் பணியாற்றுவேன் என உறுதி அளித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

பொறுப்பில் இருந்து விலகுதல் தொடர்பாக அறிக்கையில்,” பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த 28.12.2024 ஆம் நாளில் நான் நியமிக்கப்பட்டேன். சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். மருத்துவர் அய்யா அவர்கள் தான் என்றென்றும் எனது குலதெய்வம். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகிய தாங்கள் தான் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்