”அன்றே செத்துவிட்டேன்”.., அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பிய ராமதாஸ்.!
சபை நாகரீகத்தை கடைபிடிக்காதவர் அன்புமணி. பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்டது யார்? என்று ராமதாஸ் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை : டாக்டர் ராமதாஸ் கூட்டிய கூட்டத்தில் ஆதரவு குறைவாக இருந்ததால், அன்புமணிக்கே ஆதரவு அதிகம் என கூறப்பட்ட வந்த நிலையில், தற்போது டாக்டர் ராமதாஸ் அறிக்கை பாமக கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சற்று நேரத்திற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் அன்புமணி,” மேடை நாகரிகம் தெரியாதவர், நான் தான் தவறு செய்தேன், தலைவராக்கி, மத்திய அமைச்சராக்கி நான் தான் தவறு செய்துவிட்டேன். மக்கள் முன், கட்சியினர் முன் என்னை குற்றவாளியாக்கினார். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது” என கடும் விமர்சனம் செய்துள்ளார்.
நான் என்ன தவறு செய்தேன் என்ற அன்புமணி ராமதாஸின் பேச்சு நாட்டு மக்களையும், தொண்டர்களையும் திசை திருப்பும் செயலாகும். உண்மையில் தவறு செய்தது அன்புமணி அல்ல, நான்தான், எனது சத்தியத்தையும் மீறி 35 வயதில் அவரை ஒன்றிய அமைச்சராக்கி நான்தான் தவறு செய்தேன். தவறான ஆட்டத்தை தொடங்கி அடித்து ஆட தொடங்கியது அன்புமணிதான்.
புதுச்சேரியில் நடந்த பொதுக்குழு மேடையில் அநாகரிகமாக நடந்து கொண்டது யார்? முகுந்தனை இளைஞரணி செயலாளராக நியமித்தபோது மேடையிலேயே மைக்கை தூக்கி வீசியது சரியான செயலா? பனையூரில் அலுவலகம் திறந்திருக்குறேன், அங்கே வந்து என்னை சந்தியுங்கள் எனச் சொன்னது சரியா? 4 சுவற்றுக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை நடுவீதிக்கு கொண்டுவந்தது யார்? என்று அன்புமணி குறித்து காட்டமான கேள்விகளை எழுப்பினார் ராமதாஸ்.
பொய்யை மூச்சு விடாமல் பேசுபவர் அன்புமணி, அவர் கூறிய பொய்யை நம்பி நிர்வாகிகள் யாரும் வரவில்லை. கட்டுக்கோப்பாக நடத்தி வந்த கட்சியை அன்புமணி அவமானப்படுத்தி விட்டார், தலைமை பண்பு கொஞ்சம் கூட இல்லை. இதை அவரிடமே சொல்லியிருக்கிறேன், நிர்வாக குழுவில் ஒருவர் பேசினாலே அவரை கடித்து குதறிவிடுவார். இதுதான் நிர்வாக குழுவின் லட்சனம்” என்று அன்புமணி குறித்து காட்டமாக பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
லேட்டஸ்ட் செய்திகள்
மாறியது பாமக அலுவலக முகவரி…அன்புமணி ராமதாஸ் அதிரடி!
May 30, 2025