கடைசி வரை திக்..திக்.. குஜராத்துக்கு குட் பை! த்ரில் வெற்றிபெற்ற மும்பை!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

mi win

நியூ சண்டிகர் : இன்று நியூ சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் குஜராத் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தேர்வு செய்ததுபோல சொல்ல முடியாத அளவுக்கு அதிரடியாக விளையாடியது என்று சொல்லலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. மும்பை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அதிகபட்சமாக ரோஹித் 81, பேர்ஸ்டோவ் 47, சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் எடுத்தனர். மும்பை 229 என்ற பெரிய இலக்கை நிர்ணயம் செய்த நிலையில் குஜராத் அடுத்ததாக பேட்டிங் செய்ய களமிறங்கியது.

களமிறங்கியவுடன் குஜராத் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக கில் 1 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். தொடக்கமே இது குஜராத் அணிக்கு ஒரு சொதப்பலான தருணமாகவும் அமைந்தது. அடுத்ததாக சொல்லவேண்டும் என்றால் மும்பை அணிக்கு தான் அந்த அதிர்ச்சி திரும்பியது. ஏனென்றால், கில் இல்லை என்றால் என்ன நான் இருக்கேன் என சாய் சுதர்சன் அதிரடி காண்பித்தார்.

அவருடன் இணைந்து வாஷிங்டனும் சிக்ஸர் பவுண்டரி என விளாசினார்கள். இதனால் குஜராத் தான் கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிபெறப்போகிறது என்பது போல பலரும் யோசிக்க தொடங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு இருவரும் சேர்ந்து மும்பை பந்துவீச்சாளர்கள் பந்துகளை நாளா பக்கமும் சிதறவிட்டனர். போட்டியில் வெற்றிபெற வாய்ப்பு வேண்டும் என்றால் மும்பை இவர்களுடைய அதிரடியை கட்டுபடுத்தவேண்டும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டது.

அந்த சமயம் தான் மும்பை அணியின் துருப்பு சீட்டு பும்ரா களமிறங்கி தன்னுடைய மேஜிக் பந்து மூலம் வாஷிங்டன் சுந்தர் (48) விக்கெட்டை வீழ்த்தி முக்கியமான பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அதன்பிறகும் மும்பைக்கு தலை வலியை கொடுக்கும் வகையில் ரதர்ஃபோர்ட் விளையாடிக்கொண்டிருக்க மற்றோரு முனையில் செட்டில் ஆகியிருந்த சாய் 81 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார்.

எனவே, கடைசி நேரத்தில் போட்டி சற்று பரபரப்பாக மாறியது. எந்த அணி வெற்றிபெறப்போகிறது திக்..திக்காக போட்டி சென்றுகொண்டிருந்த நிலையில் 12 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அந்த சமயம் ரதர்ஃபோர்ட் விக்கெட்டை போல்ட் எடுத்தார். அடுத்ததாக 6 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டது.  1,0,2 என ஆன நிலையில், கடைசி 3 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடிக்க முடியவில்லை.  இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே, மும்பை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கடைசியாக முதல் குவாலிபயர் போட்டியில் விளையாடி தோல்வி அடைந்த பஞ்சாப் கிங்ஸ் அணி காத்துகொண்டு இருக்கிறது. இப்போது இந்த போட்டியில் வெற்றிபெற்ற மும்பை அணி வரும் ஞாயிற்றுக்கிழமை பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி ஏற்கனவே இறுதிப்போட்டியில் காத்திருந்து பெங்களூர் அணியை வரும் ஜீன் 3-ஆம் தேதி எதிர்கொள்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்