Author: பால முருகன்

பிரதமர் கிட்ட நான் பேசிய பிறகு தான் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தப்பட்டது – இபிஎஸ் எச்சரிக்கை!

திருச்சி : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, இன்று திருச்சியில் நடந்த ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின்போது, விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கப்படுவதால் அவர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாக குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துரைத்து மனு அளித்ததாகவும், அதன் விளைவாக கூட்டுறவு வங்கிகள் சிபில் ஸ்கோர் கேட்காமல் கடன் வழங்க உத்தரவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர் “விவசாயிகளுக்கு பயிர்க்கடன் பெற […]

#Trichy 6 Min Read
edappadi k. palaniswami meet modi

ட்ரா சர்ச்சை : ‘இந்தியா மேல தப்பு இல்லை’…ஸ்டோக்ஸை விமர்சித்த ஜெஃப்ரி பாய்காட்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்த ‘கைகுலுக்கல்’ முயற்சி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா (89 ரன்கள்) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (80 ரன்கள்) தங்கள் சதங்களை நெருங்கியிருந்தபோது, ஸ்டோக்ஸ் ஆட்டத்தை ட்ரா (சமநிலை) செய்யலாம் என்று கூறி, ஆட்டத்தை முடிக்க முயன்றார். ஆனால், ஜடேஜா இதை ஏற்கவில்லை, “போய் பந்து வீசு,” என்று […]

#Ravindra Jadeja 7 Min Read
ben stokes jadeja ISSUE

ஆகஸ்ட் 1 முதல் சிலிண்டர் லாரி வேலை நிறுத்தம்! காரணம் என்ன?

சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், ஆகஸ்ட் 1, 2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் இந்த முடிவை அறிவித்துள்ளது, இதனால் தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் […]

#Protest 6 Min Read
strike Cylinder truck

‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!

பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில் ஆவணி மாதத்தின் தொடக்கத்தை முன்னிட்டு நடைபெறும் நிறை புத்தரிசி பூஜைக்காக இந்த நடை திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்தப் பூஜை, ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் 16, 2025 முதல் செப்டம்பர் 15, 2025 வரை) நடைபெறும் ஐந்து நாள் மாதாந்திர பூஜைகளின் ஒரு பகுதியாகும். இந்தப் பூஜையை முன்னிட்டு, திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியம் சபரிமலை கோவிலில் […]

#Kerala 6 Min Read
Sabarimala temple opens

நீலகிரி, கோவை மொத்தம் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதே சமயம், இன்று காலை 10 மணி வரை நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை மாவட்ட மலை பகுதிகளில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு […]

#IMD 4 Min Read
weather update news

ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 பொதுமக்கள் உயிரிழந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoJK) பயங்கரவாத உள்கட்டமைப்புகளை துல்லியமாக தாக்கி அழித்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் நேற்று (ஜூலை 28) 16 மணி நேர விவாதம் […]

#Rajnath Singh 6 Min Read
narendra modi in parliament

நிமிஷா பிரியா மரண தண்டனை ரத்து? ஏ.பி. அபூபக்கர் சொன்ன முக்கிய தகவல்!

சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட் முப்தி காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் அலுவலகம் அறிவித்துள்ளது. முன்னதாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை, சனாவில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்திய மத்திய வெளியுறவு அமைச்சகம் இந்த தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. காந்தபுரம் ஏ.பி. அபூபக்கர் முஸ்லியாரின் கோரிக்கையை ஏற்று, ஷேக் உமர் ஹபீள் […]

#Kerala 8 Min Read
abubakar nimisha priya

சாத்தான்குளம் வழக்கில் புதிய திருப்பம்! ஸ்ரீதர் அப்ரூவராக மாற எதிர்ப்பு!

மதுரை : சாத்தான்குளம் காவல் நிலையத்தில் 2020-ல் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் காவலில் உயிரிழந்த வழக்கில், முதன்மை குற்றவாளியான முன்னாள் காவல் ஆய்வாளர் எஸ். ஸ்ரீதர், அரசுத் தரப்பு சாட்சியாக (அப்ரூவர்) மாறுவதற்கு மதுரை முதல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு, ஜெயராஜின் மனைவி செல்வராணி மற்றும் அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். செல்வராணி தரப்பு, “ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை அடிக்கும்போது ஸ்ரீதர் அங்கு […]

#CBI 7 Min Read
Sathankulam Case

ட்ரா செய்ய கெஞ்சிய ஸ்டோக்ஸ்…”அதெல்லாம் முடியாது பந்து போடு”..ஜடேஜா பிடிவாதம்!

மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், ரவீந்திர ஜடேஜா (89*) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (80*) ஆகியோர் சதத்தை நெருங்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், போட்டியை ட்ரா செய்யலாம் எனக் கூறி கைக்குலுக்க முன்வந்தார். ஆனால், ஜடேஜா, “அதெல்லாம் முடியாது, போய் பந்து வீசு,” என ஸ்டோக்ஸின் […]

#Ravindra Jadeja 5 Min Read
ravindra jadeja ben stokes

குடும்பங்களை கவரும் ‘தலைவன் தலைவி’…தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த ஜூலை 25, அன்று திரையரங்குகளில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியான மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் எவ்வவு கோடி வசூல் செய்துள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் முதல் மூன்று நாள் வார இறுதியில் (ஓப்பனிங் வீக்எண்ட்) 24 கோடி ரூபாய் வசூலித்து பம்பர் தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது. […]

#Vijay Sethupathi 5 Min Read
thalaivan thalaivi collection

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக, 2025 டிசம்பரில் வியோம்மித்ரா என்ற மனித உருவ ரோபோவை விண்ணுக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக இஸ்ரோ தலைவர் டாக்டர் வி. நாராயணன் தெரிவித்தார். இந்த அறிவிப்பு, சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் பேசியபோது வெளியிடப்பட்டது. இது குறித்து அவர் பேசியதாவது ” நிலாவில் […]

#ISRO 7 Min Read
v narayanan isro

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்த முடிவை ஜனவரி 9, 2026 அன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னையில் நடந்த தேமுதிக இளைஞரணி கூட்டத்தில் பேசிய அவர், “மரியாதை நிமித்தமாக தேவையான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்போம். அவர் பிரதமராக மக்கள் பணியைச் செய்ய வந்துள்ளார்,” என்று கூறினார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் தேமுதிகவின் அடுத்தகட்ட நகர்வு […]

#BJP 4 Min Read
vijay prabhakaran DMDK

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஐந்தாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக எம்.பி. கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்தத் திருத்தம், […]

#Bihar 6 Min Read
ElectoralRoll

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27) நேற்று பட்டப்பகலில் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, வேறு சமூகத்தைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 25) என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சுர்ஜித், “கவின் தனது தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். […]

#Arrest 5 Min Read
Nellai Kavin

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி உயர்ந்த புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் (ஜூலை 25, 2025), 150 ரன்கள் எடுத்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறிய ரூட், சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளைப் பற்றி Sony Liv-இல் ஹர்ஷா போக்ளேவுடன் பேசினார். அதில் பேசிய ரூட் “கிரிக்கெட்டின் சிறந்த […]

#England 7 Min Read
sachin tendulkar and joe root

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200 பணியாளர்களை, அதாவது மொத்த பணியாளர்களில் 2% பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும், உலகளாவிய பொருளாதார மாற்றங்களும் என்று TCS தலைமை நிர்வாகி கே. கிரிதிவாசன் கூறியுள்ளார். இந்த பணிநீக்கம், பெரும்பாலும் நடுத்தர மற்றும் மூத்த மேலாளர்களை பாதிக்கும். தற்போது TCS-ல் 6,13,069 […]

AI 6 Min Read
TCS

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : குஜராத் – வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும், மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (28-07-2025) ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் […]

#IMD 4 Min Read
tamil nadu rain news

ஆபரேஷன் சிந்தூர் : மக்களவையில் இன்று 16 மணி நேரம் விவாதம்!

புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற உள்ளது. மே 7, 2025 அன்று, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா நடத்திய இந்த இராணுவ நடவடிக்கை, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் மேக் இன் இந்தியா ஆயுதங்களின் வெற்றி மற்றும் துல்லியமான தாக்குதல்களை மத்திய அரசு பாராட்டியுள்ள […]

#PMModi 6 Min Read
operation sindoor

தினமும் 10 மணி நேரம் நிறுத்திக்கொள்கிறோம்! காசாவில் கருணை காட்டிய இஸ்ரேல்!

ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி ஆகிய இடங்களில் நாள்தோறும் 10 மணி நேரம் (காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை) தாக்குதல்களை நிறுத்துவதாக ஜூலை 27, 2025 அன்று அறிவித்தது. இந்த “தற்காலிக இடைநிறுத்தம்” மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காகவும், பாதுகாப்பான பாதைகள் மூலம் ஐ.நா. மற்றும் பிற பன்னாட்டு உதவி அமைப்புகளின் உணவு மற்றும் மருந்து விநியோகத்தை […]

#Gaza 6 Min Read
israel vs gaza

கர்ப்பிணி பெண்தான் டார்கெட்… சிறுமி வன்கொடுமை வழக்கு குற்றவாளி சொன்ன ஷாக்கிங் தகவல்!

திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவம் தமிழ்நாட்டில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. சம்பவம் நடந்த உடனே, சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். மாவட்ட சிறுவர் பாதுகாப்பு பிரிவும், குற்றப்புலனாய்வு துறையும் இணைந்து விசாரணையை தீவிரமாக மேற்கொண்டனர். விசாரணையின் ஆரம்பத்தில் குற்றவாளி குறித்து தெளிவான தகவல்கள் எதுவும் […]

#Child 6 Min Read
Thiruvallur atrocities