Author: பால முருகன்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க குடிமக்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில், காசாவில் 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்தது. […]

#Gaza 5 Min Read
Gaza Attack

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மீண்டும் ஐபிஎல் போட்டி மே 17-ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, சொந்த ஊருக்கு சென்ற வீரர்கள் அனைவரும் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் விளையாட அணிக்கு திரும்பி வருகிறார்கள். இந்த சுழலில், இந்த சீசனில் காயங்கள் மற்றும் பிற காரணங்களால் பல அணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல […]

Ayush Mhatre 8 Min Read
IPL 2025 Squad Changes

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு “சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு” என்ற பெயரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமனி கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தார்கள். மாநாட்டில் வந்த கூட்டம் எந்த அளவுக்கு இருந்தது என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். மாநாடு நடந்து முடிந்து சில நாட்கள் ஆகியும் கூட மாநாடு […]

#PMK 5 Min Read
Thol. Thirumavalavan

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]

#DMK 6 Min Read
mk stalin

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை […]

#ADMK 4 Min Read
vaithiyalingam

என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது. ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் […]

#Shubman Gill 7 Min Read
shubman gill test

எல்லை தாண்டி பிடிபட்ட BSF வீரர்…திருப்பி அனுப்பிய பாகிஸ்தான்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக போகிறதோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது என்று தான் சொல்லவேண்டும். ஆனால், இரண்டு நாடுகளும் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்திக்கொள்ள சம்மதம் தெரிவித்து போரை நிறுத்தியது. இருப்பினும் நீங்கள் தொடங்கினாள் நாங்கள் பதிலடி கொடுப்போம் என இந்தியா தொடர்ச்சியாக எச்சரித்து வருகிறது. இந்த சூழலில், இன்று, ஏப்ரல் 23, 2025 முதல் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் காவலில் […]

#Pakistan 5 Min Read
Purnam Kumar show

மாணவர்களே அலர்ட்! 10ஆம் வகுப்பு தேர்வு ரிசல்ட் எப்போது தெரியுமா?

சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த தேர்வுக்கான முடிவுகள் எப்போது மாணவர்கள் காத்திருந்த நிலையில், அதனைப்பற்றி சிறிய தகவலும் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, +2 (HSE +2) பொதுத் தேர்வு முடிவுகள் விரைவாகவே அதாவது மே 8, 2025 அன்று வெளியானது. அதைப்போலவே,  10ஆம் வகுப்பு பொது தேர்வுகளின் முடிவுகளும் விரைவாகவே வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் நாளை […]

#TNGovt 4 Min Read
10th result tn students

+2 துணை தேர்விற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கடைசி தேதி இதுதான் மாணவர்களே..

சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கும் வகையில் மறுதேர்வுக்கான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்வுக்கு எப்படி விண்ணப்பிப்பது? எந்த தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப காலம்: துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மாணவிகள் மே 14, 2025 முதல் மே 31, 2025 வரை மட்டுமே விண்ணப்பம் செய்துகொள்ள […]

+2 exam 5 Min Read
12th re exam

என்னோட தலையீட்டால் தான் போர் தாக்குதல் நிறுத்தப்பட்டது – மீண்டும் அதிபர் ட்ரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.  போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில்,  இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து […]

#Pakistan 6 Min Read
Donald Trump speech ind vs pak war

எடப்பாடி பழனிசாமி வேலையே பொய், பித்தலாட்டத்தை சொல்வதுதான் – முதல்வர் ஸ்டாலின் சாடல்!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு நேற்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.  இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]

#ADMK 6 Min Read
Edappadi K. Palaniswami mk stalin

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின் சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். அப்படி தான் நடிகர் சசிகுமார் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி  திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக 40 கோடிகளை தாண்டியுள்ளது. எனவே, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் சம்பளத்தை உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி  திரைப்படத்தின் வெற்றி […]

sasikumar 6 Min Read
Sasikumar Salary

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 9 பேருக்கு இன்று ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டது.  இந்த வழக்கானது அதிமுக ஆட்சியிலே தொடங்கிய நிலையில், அப்போது தீர்ப்பு கிடைக்கவில்லை. இப்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் தீர்ப்பு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அதிமுகவை சீண்டி பதிவு ஒன்றை வெளியீட்டு […]

#ADMK 7 Min Read
EPS AND MK STALIN

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான செய்தியாக இருந்து வருகிறது. இந்த சூழலில் பஞ்சாப் மாநிலம் ஆதம்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.  அதில் பேசிய அவர் ” சக்திவாய்ந்த நமது ஏவுகணைகள் சத்தத்துடன் எதிரி நாட்டு இலக்குகளை அடையும்போது, ​அவர்களுக்கு அந்த சத்தம் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்றுதான் கேட்கும். பாரத் மாதா கீ […]

#Pakistan 5 Min Read
pm modi about AirStrike

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மே 8, 2025 அன்று தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான போட்டி, பாதுகாப்பு காரணங்களால் 10.1 ஓவர்களில் நிறுத்தப்பட்டது. இதனால், ஐபிஎல் ஒரு வாரத்திற்கு தடைபட்டது. அடுத்ததாக மீண்டும் ஐபிஎல் போட்டி வரும் மே 17-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், இறுதிப் போட்டி […]

#Pakistan 6 Min Read
punjab kings 2025

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, […]

coimbatore court 4 Min Read
M K Stalin

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இன்று நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும்  அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி […]

coimbatore court 7 Min Read
vijay

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிறகு , 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது […]

coimbatore court 5 Min Read
case issue in Pollachi

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.  போர் நிறுத்தம் செய்யப்பட்டது முதல் அதற்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தான் முதல் ஆளாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார். எனவே, இந்தியா VS பாகிஸ்தான் போர் நிறுத்தம் ட்ரம்ப் எதற்காக அறிவித்தார் என்கிற கேள்விகளும் எழுந்தது. இந்த சூழலில், நேற்று மோதலை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டேன் எனக் […]

#Pakistan 4 Min Read
donald trump pm modi

பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவித்தன. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஒரு கும்பல் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பொள்ளாச்சி வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், […]

coimbatore court 6 Min Read